பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

ஆறாம் திருமொழி – காசுங்கறையுடை

(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை

இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)

கலித்துறை

3 81:

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்

ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.

கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ

நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1.

 

382:

அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்

மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்.

செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால்

நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2.

 

383:

உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து

எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?

பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே

நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3.

 

384:

மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை

மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை

வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்

நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4.

 

385:

மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை

மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை

குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்

நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5.

 

386:

நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு

கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே

சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று

நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6.

 

387:

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு

எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.

கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே

நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7.

 

388:

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்

நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்

செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்

நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8.

 

389:

ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்

மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு

கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ

நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9.

 

390:

சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய

வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த

ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்

பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10.

Leave a Reply