பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

நான்காம்பத்து

முதல் திருமொழி – கதிராயிரம்

(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும்,

கண்டார் சிலருமாகக் கூறுதல்)

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

3 28:

கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்

எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்

அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்

உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2) 1.

 

329:

நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்

ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்

காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க

வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2.

 

330:

கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய

சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்

தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப

அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3.

 

331:

தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட

மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்

ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்

வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4.

 

332:

நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்

சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்

வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு

தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5.

 

333:

பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க

வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்

பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை

எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6.

 

334:

வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்

உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்

வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று

கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7.

 

335:

நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே

நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்

ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை

பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8.

 

336:

மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்

திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்

எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து

வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9.

 

337:

கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து

புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை

திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்

பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10.

 

Leave a Reply