கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

mahakali amman temple golu

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு நவராத்திரி திருவிழா  நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அனைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் பக்தர்கள் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர்.

வரும் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ஆம் தேதி விஜயதசமி பூஜையோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.

தென்காசி மாவட்டம் கரிசல்குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தொடங்கியது விழாவில் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயிலில் நவராத்திரி கொலு படிகள் ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் மாகாளியம்மன் வைத்தும்  இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரிசையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாகவி பாரதியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் வகையில் சுவாமிவிவேகானந்தர் அன்னைதெரசா அப்துல்கலாம் ஆகியோரின் உருவ பொம்மைகளும் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள், சமுதாய பெரியோர்கள் விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனர்.



Leave a Reply