பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

நான்காம் திருமொழி – நாவகாரியம்

(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும்,

அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

3 60:

நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்

தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்

மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப்

பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2) 1.

 

361:

குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய்

செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்

துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்

பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2.

 

362:

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்

திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள்

எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்

உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3.

 

363:

உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்

நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்

நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்

பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4.

 

364:

ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்

தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்

நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை

பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5.

 

365:

பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்

ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்

நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய

பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6.

 

366:

குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து

திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்

கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்

இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7.

 

367:

நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்

தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்

குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்

விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8.

 

368:

கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்

செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்

நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்

எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9.

 

369:

காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு

தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்

கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று

பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10.

 

370:

சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்

ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்

கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்

ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2) 11.

 

Leave a Reply