பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்கை

(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)

கலிநிலைத்துறை

 

3 49:

உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற

உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை

பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு

விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.

 

350:

கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்

வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை

நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை

செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2.

 

351:

மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து

கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை

புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று

பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3.

 

352:

மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த

காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை

கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்

பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4.

 

353:

பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை

அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை

குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை

நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2) 5.

 

354:

பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்

ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை

பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக

தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6.

 

355:

கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்

இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை

கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்

இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7.

 

356:

எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய

வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த

அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று

திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8.

 

357:

கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து

மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை

ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று

ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9.

 

358:

ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக

ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை

ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்

ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10.

 

359:

மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை

நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை

மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்

மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11.

 

Leave a Reply