682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் திருவிளக்கு பூஜை.
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் காலை நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது பின்னா் திருவாசக குழு தலைவி திருவாசகி சிவபகவதி, தேவி குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான விருந்து நடந்தது. மாலை 6மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையை முத்துலெட்சுமி முதல் விளக்கை ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.
தவணைசெல்வி, திருவிளக்கு பூஜையை நடத்தினார். பின்னா் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், தங்கையா, ஆடிட்டர்சங்கர், முருகேசன், சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், கணேசன், வீரபுத்திரன், கல்யாணி, மோகன், குருவாயூர்கண்ணன், பழனியம்மாள், பேச்சியம்மாள், பகவதி, கோவில் பூஜாரிகள் ஐயப்பன், மாரியப்பன், குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.
விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனா்.