பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

ஐந்தாம் திருமொழி – ஆசைவாய்

(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு

கிதோபதேசம் செய்தல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

3 71:

ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி

அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி

வாசவார்குழலாளென்றுமயங்கி

மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே

கேசவா. புருடோ த்தமா. என்றும்

கேழலாகியகேடிலீ. என்றும்

பேசுவாரவர்எய்தும்பெருமை

பேசுவான்புகில்நம்பரமன்றே. (2) 1.

 

372:

சீயினால்செறிந்தேறியபுண்மேல்

செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்

ஈயினால்அரிப்புண்டுமயங்கி

எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்

வாயினால்நமோநாரணாவென்று

மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி

போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்

பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2.

 

373:

சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்

சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து

ஆர்வினவிலும்வாய்திறவாதே

அந்தகாலம்அடைவதன்முன்னம்

மார்வமென்பதோர்கோயிலமைத்து

மாதவனென்னும்தெய்வத்தைநட்டி

ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு

அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3.

 

374:

மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து

மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி

காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக்

கண்ணுறக்கமதாவதன்முன்னம்

மூலமாகியஒற்றையெழுத்தை

மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி

வேலைவண்ணனைமேவுதிராகில்

விண்ணகத்தினில்மேவலுமாமே. 4.

 

375:

மடிவழிவந்துநீர்புலன்சோர

வாயிலட்டியகஞ்சியும்மீண்டே

கடைவழிவாரக்கண்டமடைப்பக்

கண்ணுறக்கமதாவதன்முன்னம்

தொடைவழிஉம்மைநாய்கள்கவரா

சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்

இடைவழியில்நீர்கூறையும்இழவீர்

இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5.

 

376:

அங்கம்விட்டவையைந்துமகற்றி

ஆவிமூக்கினில்சோதித்தபின்னை

சங்கம்விட்டவர்கையைமறித்துப்

பையவேதலைசாய்ப்பதன்முன்னம்

வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை

மதுசூதனனைமார்பில்

தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்

சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6.

 

377:

தென்னவன்தமர்செப்பமிலாதார்

சேவதக்குவார்போலப்புகுந்து

பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்

பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்

இன்னவன்இனையானென்றுசொல்லி

எண்ணிஉள்ளத்திருளறநோக்கி

மன்னவன்மதுசூதனென்பார்

வானகத்துமன்றாடிகள்தாமே. 7.

 

378:

கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து

குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து

பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு

நரிப்படைக்குஒருபாகுடம்போலே

கோடிமூடியெடுப்பதன்முன்னம்

கௌத்துவமுடைக்கோவிந்தனோடு

கூடியாடியஉள்ளத்தரானால்

குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8.

 

379:

வாயொருபக்கம்வாங்கிவலிப்ப

வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற

தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்

தாரமும்ஒருபக்கம்அலற்ற

தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்

செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற

மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு

அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9.

 

380:

செத்துப்போவதோர்போதுநினைந்து

செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்

பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்

பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்

சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்

செய்தமாலைஇவைபத்தும்வல்லார்

சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்

சென்றசிந்தைபெறுவர்தாமே. (2) 10.

Leave a Reply