பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து

பெரியாழ்வார்

ஐந்தாம் பத்து

முதல் திருமொழி

வாக்குத்தூய்மை

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

43 3:

வாக்குத்தூய்மையிலாமையினாலே

மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்

நாக்குநின்னையல்லால்அறியாது

நானதஞ்சுவன்என்வசமன்று

மூர்க்குப்பேசுகின்றானிவனென்று

முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்

காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்

காரணா. கருளக்கொடியானே. (2) 1.

 

434:

சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்

சங்குசக்கரமேந்துகையனே.

பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்

பொறுப்பது பெரியோர்கடனன்றே

விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்

வேறொருவரோடுஎன்மனம்பற்றாது

உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்

ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2.

 

435:

நன்மைதீமைகளொன்றும்அறியேன்

நாரணா. என்னும்இத்த்னையல்லால்

புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்

புகழ்வானன்றுகண்டாய்திருமாலே.

உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்

ஓவாதேநமோநாரணா. என்பன்

வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்

வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3.

 

436:

நெடுமையால்உலகேழுமளந்தாய்.

நின்மலா. நெடியாய். அடியேனைக்

குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா

கூறைசோறுஇவைவேண்டுவதில்லை

அடிமையென்னுமக்கோயின்மையாலே

அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்

கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை

கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4.

 

437:

தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை

துடவையும்கிணறும்இவையெல்லாம்

வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே

வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்

நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது

நச்சுவார்பலர்கேழலொன்றாகி

கோட்டுமண்கொண்டகொள்கையினானே.

குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5.

 

438:

கண்ணா. நான்முகனைப்படைத்தானே.

காரணா. கரியாய். அடியேன்நான்

உண்ணாநாள்பசியாவதொன்றில்லை

ஓவாதேநமோநாரணாவென்று

எண்ணாநாளும்இருக்கெசுச்சாம

வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்

நண்ணாநாள் அவைதத்துறுமாகில்

அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6.

 

439:

வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை

மெத்தையாகவிரித்து அதன்மேலே

கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்

காணலாங்கொல் என்றாசையினாலே

உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி

உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்

துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்

சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7.

 

440:

வண்ணமால்வரையேகுடையாக

மாரிகாத்தவனே. மதுசூதா.

கண்ணனே. கரிகோள்விடுத்தானே.

காரணா. களிறட்டபிரானே.

எண்ணுவாரிடரைக்களைவானே.

ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.

நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்

நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8.

 

441:

நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்

நாதனே. நரசிங்கமதானாய்.

உம்பர்கோனுலகேழும்அளந்தாய்

ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி

கம்பமாகரிகோள்விடுத்தானே.

காரணா. கடலைக்கடைந்தானே.

எம்பிரான். என்னையாளுடைத்தேனே.

ஏழையேனிடரைக்களையாயே. 9.

 

442:

காமர்தாதைகருதலர்சிங்கம்

காணவினியகருங்குழல்குட்டன்

வாமனன்என்மரகதவண்ணன்

மாதவன்மதுசூதனன்தன்னை

சேமநன்கமரும்புதுவையர்கோன்

விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்

நாமமென்றுநவின்றுரைப்பார்கள்

நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2) 10.

Leave a Reply