பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

 

3; font-family: Arial, Helvetica, sans-serif, TheneeUniTx; text-align: center; ">

மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை

 

 

(கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

244:

சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ

கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்

காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்

ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2) 1.

 

245:

கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்

மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து

உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்

என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2.

 

246:

காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்

சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு

பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன்

ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3.

 

247:

கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும்

குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே.

கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல

அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4.

 

248:

பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே.

எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே.

சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்

கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5.

 

249:

அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு

நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்

என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை

கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6.

 

250:

பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல்

கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை

சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்

என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7.

 

251:

கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு

கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்

ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது

வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.

 

252:

திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்

பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன்

கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்

கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9.

 

253:

புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை

கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்

செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்

கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 10.

Leave a Reply