பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

ஏழாம் திருமொழி – ஐயபுழுதி

(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு

நற்றாய் இரங்கும் பாசுரம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

286:

ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்

செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்

கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்

பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1.

 

287:

வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில

சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி

தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி

மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2.

 

288:

பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்

சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்

கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை

சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3 .

 

289:

ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி

தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?

ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி

மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4.

 

290:

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்

சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்

கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை

பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.

 

291:

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்

இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்

பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்

வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.

 

292:

பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்

கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்

கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்

வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7.

 

293:

காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்

கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்

தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்

மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8.

 

294:

கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை

வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்

செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள

மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.

 

295:

பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே

இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்

மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்

ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10.

 

296:

ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்

மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை

கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன

மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2) 11.

 

 

Leave a Reply