பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

ஆறாம் திருமொழி – நாவலம்

(கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)

275:

நாவலம்பெரியதீவினில்வாழும்

நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்

தூவலம்புரியுடையதிருமால்

தூயவாயில்குழலோசைவழியே

கோவலர்சிறுமியர்இளங்கொங்கை

குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்

காவலும்கடந்துகயிறுமாலையாகி

வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1.

 

276:

இடவணரைஇடத்தோளொடுசாய்த்து

இருகைகூடப்புருவம்நெரிந்தேற

குடவயிறுபடவாய்கடைகூடக்

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது

மடமயில்களொடுமான்பிணைபோலே

மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ

உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி

ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.

 

277:

வானிலவரசுவைகுந்தக்குட்டன்

வாசுதேவன்மதுரைமன்னன் நந்த

கோனிளவரசுகோவலர்குட்டன்

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது

வானிளம்படியர்வந்துவந்தீண்டி

மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப

தேனளவுசெறிகூந்தலவிழச்

சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3 .

 

278:

தேனுகன்பிலம்பன்காளியனென்னும்

தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி

கானகம்படிஉலாவியுலாவிக்

கருஞ்சிறுக்கன்குழலூதினபோது

மேனகையொடுதிலோத்தமைஅரம்பை

உருப்பசியரவர்வெள்கிமயங்கி

வானகம்படியில்வாய்திறப்பின்றி

ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4.

 

279:

முன்நரசிங்கமதாகி அவுணன்

முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்

மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்

குழலினோசை செவியைப்பற்றிவாங்க

நன்னரம்புடையதும்புருவோடு

நாரதனும்தம்தம்வீணைமறந்து

கின்னரமிதுனங்களும் தம்தம்

கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5.

 

280:

செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்

தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்

நம்பரமன்இந்நாள்குழலூதக்

கேட்டவர்கள் இடருற்றனகேளீர்

அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்

அமுதகீதவலையால்சுருக்குண்டு

நம்பரமன்றென்றுநாணிமயங்கி

நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6.

 

281:

புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்

பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து

அவையுள் நாகத்தணையான்குழலூத

அமரலோகத்தளவும்சென்றிசைப்ப

அவியுணாமறந்துவானவரெல்லாம்

ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி

செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து

கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7.

 

282:

சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்

செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க

குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்

கோவிந்தன்குழல்கொடுஊதினபோது

பறவையின்கணங்கள்கூடுதுறந்து

வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப

கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக்

கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8.

 

283:

திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்

செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே

சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்

ஊதுகின்றகுழலோசைவழியே

மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து

மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர

இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா

எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9.

 

284:

கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து

கட்டிநன்குடுத்தபீதகவாடை

அருங்கலவுருவினாயர்பெருமான்

அவனொருவன்குழலூதினபோது

மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்

மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்

இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற

பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10.

 

285:

குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்

கோவிந்தனுடையகோமளவாயில்

குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்

கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை

குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்

விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்

குழலைவென்றகுளிர்வாயினராகிச்

சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2) 11.

 

Leave a Reply