பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி

(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

264:

அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்

தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப்

பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த

பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை

வட்டத்தடங்கண்மடமான்கன்றினை

வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்

கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1.

 

265:

வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்

வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு

மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப

மதுசூதன்எடுத்துமறித்தமலை

இழவுதரியாததோரீற்றுப்பிடி

இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்

குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2.

 

266:

அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்

ஆனாயரும்ஆநிரையும்அலறி

எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப

இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை

தம்மைச்சரணென்றதம்பாவையரைப்

புனமேய்கின்றமானினம்காண்மினென்று

கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3.

 

267:

கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்

கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்

அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு

அமரர்பெருமான்கொண்டுநின்றமலை

கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்

கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்

குடவாய்ப்படநின்றுமழைபொழியும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4.

 

268:

வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்

அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்

ஏனத்துருவாகியஈசன்எந்தை

இடவனெழவாங்கியெடுத்தமலை

கானக்களியானைதன்கொம்பிழந்து

கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து

கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5.

 

269:

செப்பாடுடையதிருமாலவன் தன்

செந்தாமரைக்கைவிரலைந்தினையும்

கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்

காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை

எப்பாடும்பரந்திழிதெள்ளருவி

இலங்குமணிமுத்துவடம்பிறழ

குப்பாயமெனநின்றுகாட்சிதரும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6.

 

270:

படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்

படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்

தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்

தாமோதரன்தாங்குதடவரைதான்

அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த

அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை

குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7.

 

271:

சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்

சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு

நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்

நாராயணன்முன்முகம்காத்தமலை

இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்

இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய

கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8.

 

272:

வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்

வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை

தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்

தாமோதரன்தாங்குதடவரைதான்

முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்

முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை

கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9.

 

273:

கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்

கோலமும்அழிந்திலவாடிற்றில

வடிவேறுதிருவுகிர்நொந்துமில

மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்

முடியேறியமாமுகிற்பல்கணங்கள்

முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்

குடியேறியிருந்துமழைபொழியும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10.

 

274:

அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு

அரவப்பகையூர்தியவனுடைய

குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்

திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த்

திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்

பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்

பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11.

Leave a Reply