style="text-align: center;">2ஆம் பத்து 9ஆம் திருவாய்மொழி
2991
எம்மாவீட்டுத் திறமும்செப்பம் நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே
அம்மாவடியென் வேண்டுவதீதே. 2.9.1
2992
இதேயானுன்னைக் கொள்வதெஞ்ஞான்றும் என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்
எய்தாநின்கழல் யானெய்த ஞானக்
கைதா காலக்கழிவுசெய்யேலே. 2.9.2
2993
செய்யேல்தீவினையென் றருள்செய்யும் என்
கையார்ச்சக்கரக் கண்ணபிரானே
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த அருள்செய்யெனக்கே. 2.9.3
2994
எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று என்
மனக்கேவந் திடைவீடின்றிமன்னி
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே. 2.9.4
2995
சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்
இறப்பிலெய்துகவெய்தற்க யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே. 2.9.5
2996
மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே. 2.9.6
2997
வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய் உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய் எனக்கென்றுமெக்காலே. 2.9.7
2998
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில் மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்
மிக்கார்வேத விமலர்விழுங்கும் என்
அக்காரக்கனியே உன்னையானே. 2.9.8
2999
யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே. 2.9.9
3000
ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே. 2.9.10
3001
விடலில்சக்கரத் தண்ணலை மேவல்
விடலில்வண்குருகூர்ச் சடகோபன்சொல்
கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே. 2.9.11