திருவாய்மொழி இரண்டாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">2ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி

2967

கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்

மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா

ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்

நாயகன் எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1

 

2968

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்

காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை

சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று

வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2

 

2969

மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது

யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து

தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்

கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3

 

2970

கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து

தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி என்னைக்கொண் டென்

பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும்

மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4

 

2971

விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்

விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு

விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி

விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5

 

2972

மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி

துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்

எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய

விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6

 

2973

திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்

உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று உள்ளிப்

பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே

மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7

 

2974

வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்

காமனைப்பயந்தாய் என்றென்றுன்கழல்பாடியேபணிந்து

தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க என்னைத்

தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8

 

2975

சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்

வெரீஇ அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து

மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்

இரீஇ உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9

 

2976

இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்

முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று

தெருடியாகில்நெஞ்சேவணங்கு திண்ணமறியறிந்து

மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10

 

2977

பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்

எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த

கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்

வெற்பன் விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11

 

 

2978

தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை

ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்

தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்

ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12

 

2979

வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை

கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்

பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்

பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13

Leave a Reply