style="text-align: center;">2ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி
2967
கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன் எம்பிரானெம்மான்நாராயணனாலே. 2.7.1
2968
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே. 2.7.2
2969
மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே. 2.7.3
2970
கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி என்னைக்கொண் டென்
பாவந்தன்னையும்பாறக்கைத் தெமரேழெழுபிறப்பும்
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே. 2.7.4
2971
விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே. 2.7.5
2972
மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே. 2.7.6
2973
திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே. 2.7.7
2974
வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய் என்றென்றுன்கழல்பாடியேபணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க என்னைத்
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே. 2.7.8
2975
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே. 2.7.9
2976
இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று
தெருடியாகில்நெஞ்சேவணங்கு திண்ணமறியறிந்து
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே. 2.7.10
2977
பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்
எற்பரனென்னையாக்கிக் கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன் விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே. 2.7.11
2978
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே. 2.7.12
2979
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்
பண்ணில்பன்னிருநாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே. 2.7.13