style="text-align: center;">2ஆம் பத்து 8ஆம் திருவாய்மொழி
2980
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது இருவரவர்முதலும்தானே
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே. 2.8.1
2981
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்
பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த
பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2
2982
புணர்க்குமயனா மழிக்குமரனாம்
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. 2.8.3
2983
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்
அலமந்துவீய வசுரரைச்செற்றான்
பலமுந்துசீரில் படிமினோவாதே. 2.8.4
2984
ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே. 2.8.5
2985
தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே? 2.8.6
2986
கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும் தன்னுள்கரக்குமுமிழும்
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்றமாலார்க்காண்பாரே. 2.8.7
2987
காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே. 2.8.8
2988
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9
2989
சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே. 2.8.10
2990
கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்
விண்டலையில்வீற்றிருந் தாள்வரெம்மாவீடே. 2.8.11