style="text-align: center;">2ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி
2923
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1
2924
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய
ஒத்தாயெப்பொருட்கு முயிராய் என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த
அத்தா நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2
2925
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3
2926
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்
எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4
2927
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே
தனியேன்வாழ்முதலே பொழிலேழுமேனமொன்றாய்
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5
2928
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6
2929
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே
பன்னலார்பயிலும் பரனேபவித்திரனே
கன்னலேஅமுதே கார்முகிலேஎன்கண்ணா
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7
2930
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8
2931
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9
2932
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10
2933
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11