திருவாய்மொழி இரண்டாம் பத்து

திருவாய்மொழி இரண்டாம் பத்து

 

இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி

2901

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்

ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்

நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்

நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1

 

2902

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே

சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்

ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்

தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2

 

2903

காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்

நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3

 

2904

கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்

சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்

அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ

உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4

 

2905

ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு

தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற

வாழியவானமே நீயும fமதுசூதன்

பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5

 

2906

நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்

மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்

ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்

மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6

 

2907

தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்

ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே

வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி

மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7

 

2908

இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய்

மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்

உருளும்சகடம் உதைத்தபெருமானார்

அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8

 

2909

நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த

நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்

செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்

அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9

 

2910

வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த

ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்

மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த

மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10

 

2911

சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே

ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்

ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்

சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *