திருவாய்மொழி முதல் பத்து

நம்மாழ்வார்

300cc; font-family: Helvetica, Arial, sans-serif, TheneeUniTx; font-size: 13px; font-weight: bold;">திருவாய்மொழி முதற் பத்து – 1ஆம் திருமொழி.

2791

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. (2) 1.1.1

 

2792

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்

மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்

இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்

இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே. 1.1.2

 

2793

இலனது வுடையனி தெனநினை வரியவன்

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்

புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்

நலனுடை யொருவனை நணுகினம் நாமே. 1.1.3

 

2794

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்

தாமவரிவருவர், அதுவிது வுதுவெது

வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை

ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

 

2795

அவரவர் தமதம தறிவறி வகைவகை

அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்

அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்

அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

 

2796

நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்

நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்

என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்

என்றுமொ ரியல்வொடு நின்றவெந் திடரே. 1.1.6

 

2797

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை

படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்

உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்

சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. 1.1.7

 

2798

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்

வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்

புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து

அரனயன் எனவுல கழித்தமைத் துளனே. 1.1.8

 

2799

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்

உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்

உளனென விலனென விவைகுண முடைமையில்

உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே. 1.1.9

 

2800

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்

பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற

கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்

கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே. 1.1.10

 

2801

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை

வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற

பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்

நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே. (2) 1.1.11

 

Leave a Reply