style="text-align: center;">2ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி
2912
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்
எண்ணின்மீதிய னெம்பெருமான்
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட நங்f
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1
2913
ஏபாவம்பரமே யேழுலகும்
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்
கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2
2914
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3
2915
தேவுமெப் பொருளும்படைக்க
பூவில்நான் முகனைப்படைத்த
தேவனெம் பெருமானுக்கல்லால்
பூவும்பூசனையும் தகுமே. 2.2.4
2916
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்
மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5
2917
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி
அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6
2918
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்
உள்ளுளா ரறிவார் அவன்றன்
கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7
2919
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்
வருத்தித்தமாயப் பிரானையன்றி ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8
2920
காக்குமியல்வினன் கண்ணபெருமான்
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்
ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9
2921
கள்வா எம்மையு மேழுலகும் நின்
னுள்ளேதோற்றிய இறைவா. என்று
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10
2922
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை குருகூர்ச்சடகோபன்சொல்
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11