style="text-align: center;">2ஆம் பத்து 5ஆம் திருவாய்மொழி
2945
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1
2946
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2
2947
என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3
2948
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4
2949
ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே. 2.5.5
2950
பலபலவேயாபரணம் பேரும்பலபலவே
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6
2951
பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்
பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம்போரேறே. 2.5.7
2952
பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. 2.5.8
2953
சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்
அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே. 2.5.9
2954
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே. 2.5.10
2955
கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை
கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே. 2.5.11