style="text-align: center;">2ஆம் பத்து 4ஆம் திருவாய்மொழி
2934
ஆடியாடி யகம்கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று
வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1
2935
வாணுதலிம்மடவரல் உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள் விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர் உம்மைக்
காண நீரிரக்கமிலீரே. 2.4.2
2936
இரக்கமனத்தோ டெரியணை
அரக்குமெழுகு மொக்குமிவள்
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்
அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3
2937
இலங்கைசெற்றவனே என்னும் பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும் கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4
2938
இவளிராப்பகல் வாய்வெரீஇ தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள் வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர் என
தவளவண்ணர் தகவுகளே. 2.4.5
2939
தகவுடையவனே யென்னும் பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும் என
தகவுயிர்க்கமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6
2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து என
வள்ளலேகண்ணனேயென்னும் பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்என்னும் என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7
2941
வஞ்சனே என்னும் கைதொழும் தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8
2942
பட்டபோதெழு போதறியாள் விரை
மட்டலர்தண்துழாய் என்னும் சுடர்
வட்டவாய்நுதி நேமியீர் நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9
2943
ஏழைபேதை யிராப்பகல் தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள் கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர் இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10
2944
வாட்டமில்புகழ் வாமனனை இசை
கூட்டிவண்சடகோபன் சொல் அமை
பாட்டோ ராயிரத்திப் பத்தால் அடி
குட்டலாகு மந்தாமமே. 2.4.11