682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலை நவகிரக கோயில் கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13ல் நடைபெற உள்ள நிலையில் இன்று கும்பாபிஷேக பூஜைகள் சபரிமலை தந்திரி பிரம்மஶ்ரீ கண்டரரு ராஜீவரரு தலைமையில் இன்று துவங்கியது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை ஜூலை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெற்றது .ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெற்றன .ஜூலை 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.
அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது.
ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சபரிமலையில் மிதமான மழை பெய்து வருகிறது.