பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

ஏழாம் திருமொழி – ஆனிரை

(கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

182:

ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்

கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட

பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப

தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1.

 

183 :

கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்

உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.

திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.

மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.

 

184:

மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு

கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி

நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய்.

பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.

 

185:

தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே

மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற

புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே

உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.

 

186:

புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.

கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்.

அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்

தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.

 

187:

எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.

கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்.

தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு

பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.

 

188:

குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.

மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா.

இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்.

குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.

 

189:

சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.

சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்.

ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய்.

ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.

 

190:

அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.

தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா.

உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்.

கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.

 

191:

செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி

எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று

மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை

பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10.

 

 

Leave a Reply