பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

 

இரண்டாம் திருமொழி – அரவணையாய்

(கண்ணனை முலையுண்ண அழைத்தல்)

கலிவிருத்தம்

 

128:

அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே

இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ

வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய

திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1.

 

129:

வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்

இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை

எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே

முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.

 

13 0:

தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்

வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா.

உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்

நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.

 

131:

கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய

பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று

அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ

கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.

 

132:

தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து

மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா.

தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா

ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.

 

133:

மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு

இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார்

என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்

என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.

 

134:

பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே

கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி

வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி

கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.

 

135:

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்

திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி

ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு

இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.

 

136:

அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்

செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே

அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம

அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.

 

137:

ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே

பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்

ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி

ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.

 

138:

வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்

நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்

பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்

சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11.

 

 

 

Leave a Reply