பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

மூன்றாம் திருமொழி – போய்ப்பாடு

 

(பன்னிருநாமம்: காதுகுத்துதல்)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

13 9:

போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்

பொருதிறல்கஞ்சன்கடியன்

காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத்

தனியேபோய்எங்கும்திரிதி

பேய்ப்பால்முலையுண்டபித்தனே.

கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த

ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்

அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1.

 

140:

வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி

மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப

நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத

நாராயணா. இங்கேவாராய்

எண்ணற்கரியபிரானே. திரியை

எரியாமேகாதுக்கிடுவன்

கண்ணுக்குநன்றுமழகுடைய

கனகக்கடிப்பும்இவையா. 2.

 

141:

வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்

மகரக்குழைகொண்டுவைத்தேன்

வெய்யவேகாதில்திரியையிடுவன்

நீவேண்டியதெல்லாம்தருவன்

உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய

ஒண்சுடராயர்கொழுந்தே.

மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து

மாதவனே. இங்கேவாராய். 3.

 

142:

வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு

வார்காதுதாழப்பெருக்கி

குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்

கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய்

இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்

இனியபலாப்பழம்தந்து

சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்

சோத்தம்பிரான். இங்கேவாராய். 4.

 

143:

சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்

சுரிகுழலாரொடுநீபோய்

கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்

குணங்கொண்டிடுவனோ? நம்பீ.

பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்

பிரானே. திரியிடவொட்டில்

வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்

விட்டுவே. நீஇங்கேவாராய். 5.

 

144:

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.

உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி

மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி

மதுசூதனேயென்றிருந்தேன்

புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்

பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ.

கண்ணா. என்கார்முகிலே.

கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6.

 

145:

முலையேதும்வேண்டேனென்றோடி

நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு

மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்

பசுநிரைமேய்த்தாய்.

சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா.

திருவாயர்பாடிப்பிரானே.

தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே

விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7.

 

146:

என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்

என்னைநான்மண்ணுண்டேனாக

அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்

அனைவர்க்கும்காட்டிற்றிலையே

வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ.

உன்காதுகள்தூரும்

துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே.

திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8.

 

147:

மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்

தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று

கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்

காணவேகட்டிற்றிலையே?

செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்

சிரீதரா. உன்காதுதூரும்

கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற

காரிகையார்சிரியாமே. 9.

 

148:

காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?

காதுகள்வீங்கியெறியில்

தாரியாதாகில்தலைநொந்திடுமென்று

விட்டிட்டேன்குற்றமேயன்றே

சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது

பெருக்கித்திரியவும்காண்டி

ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட

இருடீகேசா. என்தன்கண்ணே. 10.

 

149:

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்

கடிகமழ்பூங்குழலார்கள்

எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்

பெருமானே. எங்களமுதே.

உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்

நோவாமேகாதுக்கிடுவன்

பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட

பற்பநாபா. இங்கேவாராய். 11.

 

150:

வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து

வலியவேகாதில்கடிப்பை

நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?

காதுகள்நொந்திடும்கில்லேன்

நாவற்பழம்கொண்டுவைத்தேன்

இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்

சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட

தாமோதரா. இங்கேவாராய். 12.

 

151:

வார்காதுதாழப்பெருக்கியமைத்து

மகரக்குழையிடவேண்டி

சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்

சிந்தையுள்நின்றுதிகழ

பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்

பன்னிருநாமத்தாற்சொன்ன

ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்

அச்சுதனுக்குஅடியாரே. 13.

 

 

Leave a Reply