திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

(பியாகடை ராகம் – திருபுடை தாளம்)

 

782:

காலநேமி காலனே. கணக்கிலாத கீர்த்தியாய்,

ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே,

வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீர,நின்

பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே. (3 1)

 

783:

குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்

அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ,

இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே,

பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே? (32)

 

784:

மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து,

பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்,

நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ. மன்னுசீர்,

பொன்னிறத்த வண்ணானாய புண்டரீக னல்லையே? (33)

 

785:

ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்,

சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்,

வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே? (34)

 

786:

அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்,

தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்

கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்

எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே. (35)

 

787:

ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்

சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்

வீடுவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து,

ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ? (36)

 

788:

காய்த்தநீள்வி ளங்கனியு திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்

சாய்த்து,மாபி ளந்தகைத்த லத்தகண்ண னென்பரால்

ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை யுண்டுவெண்ணெ யுண்டு,பின்

பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ ரேனமாய வாமனா. (37)

 

789:

கடங்கலந்த வன்கரிம ருப்பொசித்துஓர் பொய்கைவாய்,

விடங்கலந்த பாம்பின்மேல்ந டம் பயின்ற நாதனே

குடங்கலந்த கூத்தனாய கொண்டல்வண்ண. தண்டுழாய்,

வடங்கலந்த மாலைமார்ப. காலநேமி காலனே. (38)

 

790:

வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்,

வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்,

வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ

வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே. (39)

 

791:

ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்,

ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்,

ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்து,முன்

ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே? (40)

 

 

 

Leave a Reply