திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த

திருச்சந்த விருத்தம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

 

திருச்சந்த விருத்தத் தனியன்கள்

 

திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை

தரவு கொச்சகக் கலிப்பா

 

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர*

திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்,*

கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,*

திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.

 

இருவிகற்ப நேரிசை வெண்பா

 

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து,* தம்மில்

புலவர் புகழ்க்கோலால் தூக்க,* – உலகுதன்னை

வைத்தெடுத்த பக்கத்தும்,* மாநீர் மழிசையே

வைத்தெடுத்த பக்கம் வலிது.

 

திருச்சந்த விருத்தம்

 

சந்தக் கலி விருத்தம்

எம்பெருமானே பேருண்மை எனல்

(யமுனாகல்யாணி ராகம் – ரூபக தாளம்)

752:

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்,

மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்,

நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? (2) (1)

 

753 :

ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்,

வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்,

ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே. (2)

 

753:

ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்,

ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே,

ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று,

ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே? (3)

 

755:

மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்,

மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய,

தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்,

ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே. (4)

 

756:

நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோ றும் ஆவியாய்,

ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று,

என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்,

அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே? (5)

 

757:

நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை,

நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்,

மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து,

ஏகமேந்தி நின்றநீர்மை, நின்கணேயி யன்றதெ. (6)

 

758:

ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்,

ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்,

ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே

ஒன்றிரண்டு கண்ணினுனு முன்னையேத்த வல்லனே? (7)

 

759:

ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து,

ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ,

ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி,

ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே? (8)

 

760:

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்,

நீதியால்வ ணங்குபாத நின்மலா.நி லாயசீர்

வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்,

நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே (9)

 

761:

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்

தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்,

நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்,

நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே. (10)

Leave a Reply