திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

(அபரூப ராகம் – ரூபக தாளம்)

762:
சொல்லினால்தொ டர்ச்சிநீ சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள் சொல்ல வல்லரே? (11)

763 :
உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்தி, மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே? (12)

764:
இன்னையென்று சொல்லலாவ தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர் நீர்மையால்நி னைக்கிலே. (13)

765:
தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே? (14)

766:
அங்கமாறும் வேதநான்கு மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே? (15)

767:
தலைக்கணத்து கள்குழம்பு சாதிசோதி தோற்றாமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும் மாட்சிநின்றன் மாட்சியே. (16)

768:
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே. (17)

769:
விடத்தவாயொ ராயிரமி ராயிரம்கண் வெந்தழல்,
விடத்துவீழ்வி லாதபோகம் மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ தென்கொல்வேலை வண்ணாணே. (18)

770:
புள்ளாதாகி வேதநான்கு மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி டத்தல்காத லித்ததே. (19)

771:
கூசமொன்று மின்றிமாசு ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து பாடமுன்கி டந்ததும்,
பாசம்நின்ற நீரில்வாழு மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த வாறுகூறு தேறவே. (20)

Leave a Reply