திருச்சந்தவிருத்தம்

திருமழிசையாழ்வார்

 

 

(தோடி ராகம் – ஆதி தாளம்)


802:
சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்,
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்,
பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்,
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே. (51)

803 :
பொற்றையுற்ற முற்றல்யானை போரெதிர்ந்து வந்ததை,
பற்றியுற்று மற்றதன் மருப்பொசித்த பாகனூர்,
சிற்றெயிற்று முற்றல்மூங்கில் மூன்றுதண்ட ரொன்றினர்,
அற்றபற்றர் சுற்றிவாழு மந்தணீர ரங்கமே. (52)

804:
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்,
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோட,வாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்,
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே. (53)

805:
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்,
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்,
குலைத்தலைத்தி றத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு,
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே. (54)

806:
மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்,
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்,
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்,
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே? (55)

807:
இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக,
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே,
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்,
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே? (56)

808:
சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்,
அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்,
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்,
பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே. (57)

809:
மரங்கெடந டந்தடர்த்து மத்தயானை மத்தகத்து,
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா,
துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாத, வேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே? (58)

810:
சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்,
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா,
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை,
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே. (59)

811:
செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திட,உ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே? (2) (60)

Leave a Reply