(ஸாவேரி ராகம் – திரிபுடை தாளம்)
822:
வண்டுலாவு கோதைமாதர் காரணத்தி னால்வெகுண்டு
இண்டவாண னீரைஞ்_று தோள்களைத்து ணித்தநாள்,
முண்டனீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிடக்,
கண்டு,நாணி வாணனுக்கி ரங்கினானெம் மாயனே. (71)
823
:
போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்,
போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்,
ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே (72)
824:
மரம்பொதச் ரந்துரந்து வாலிவீழ முன்னொர்நாள்,
உரம்பொதச்ச ரந்துரந்த வும்பராளி யெம்பிரான்,
வரம்குறிப்பில் வைத்தவர்க்க லாதுவான மாளிலும்,
நிரம்புநீடு போகமெத்தி றத்ததும்யார்க்கு மில்லையே. (73)
825:
அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்,
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்சி றந்திடும்,
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்,
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே. (74)
826:
ஒன்றிநின்று நல்தவம்செய், தூழியூழி தோறெலாம்,
நின்றுநின்ற வன்குணங்க ளுள்ளியுள்ளம் தூயராய்,
சென்றுசென்று தேவதேவ ரும்பரும்ப ரும்பராய்,
அன்றியெங்கள் செங்கண்மாலை யாவர்காண வல்லரே? (75)
827:
புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து,
நன்புலவ ழிதிறந்து ஞானநற்சு டர்கொளீஇ,
என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்,
அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே? (76)
828:
எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்,
எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை,
எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்,
எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே. (77)
829:
சோர்விலாத காதலால்தொ டக்கறாம னத்தராய்,
நீரராவ ணைக்கிடந்த நின்மலன்ந லங்கழல்,
ஆர்வமோடி றைஞ்சிநின்ற வன்பெயரெட் டெழுத்தும்,
வாரமாக வோதுவார்கள் வல்லர்வான மாளவே. (78)
830:
பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய்,
பத்தினால்தி சைக்கணின்ற நாடுபெற்ற நன்மையாய்,
பத்தினாய தோற்றமோடொ ராற்றல்மிக்க வாதிபால்,
பத்தராம வர்க்கலாது முத்திமுற்ற லாகுமே? (79)
831:
வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்,
நாசமாகி நாளுலப்ப நன்மைசேர்ப னங்கனிக்கு,
வீசமேல்நி மிர்ந்ததோளி லில்லையாக்கி னாய்,கழற்கு
ஆசையாம வர்க்கலால மரராக லாகுமே? (80)