(சுருட்டி ராகம் – திரிபுடை தாளம்)
83
2:
கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து,
உடைந்தவாலி தன்பினுக்கு தவவந்தி ராமனாய்,
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து,வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ (81)
833:
எத்திறத்து மொத்துநின்று யர்ந்துயர்ந்த பெற்றியோய்,
முத்திறத்து மூரிநீர ராவணைத்து யின்ற,நின்
பத்துறுத்த சிந்தையோடு நின்றுபாசம் விட்டவர்க்கு,
எத்திறத்து மின்பமிங்கு மங்குமெங்கு மாகுமே. (82)
834:
மட்டுலாவு தண்டுழாய லங்கலாய்.பொ லன்கழல்,
விட்டுவீள்வி லாதபோகம் விண்ணில்நண்ணி யேறினும்,
எட்டினோடி ரண்டெனும்க யிற்றினால்ம னந்தனைக்
கட்டி,வீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே. (83)
835:
பின்பிறக்க வைத்தனன்கொ லன்றிநின்று தன்கழற்கு,
அன்புறைக்க வைத்தநாள றிந்தனன்கொ லாழியான்,
தந்திறத்தொ ரன்பிலாவ றிவிலாத நாயினேன்,
எந்திறத்தி லென்கொலெம்பி ரான்குறிப்பில் வைத்ததே? (84)
836:
நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்,
வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்,
மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே,
உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை மாயனே. (85)
837:
சாடுசாடு பாதனே.ச லங்கலந்த பொய்கைவாய்,
ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்ற நாதனே,
கோடுநீடு கைய.செய்ய பாதநாளு முன்னினால்,
வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல்? கண்ணனே. (86)
838:
நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி னாதனோடு போதின்மேல்,
நற்றவத்து நாதனோடு மற்றுமுள்ள வானவர்,
கற்றபெற்றி யால்வணங்கு பாத.நாத. வேத,நின்
பற்றலாலொர் பற்றுமற்ற துற்றிலேனு ரைக்கிலே. (87)
839:
வெள்ளைவேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்,
அள்ளலாக்க டைந்தவன்ற ருவரைக்கொ ராமையாய்,
உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்க ளித்த,எம்
வள்ளலாரை யன்றிமற்றொர், தெய்வம்நான்ம திப்பனே? (88)
840:
பார்மிகுத்த பாரமுன்னொ ழிச்சுவான ருச்சனன்,
தேர்மிகுத்து மாயமாக்கி நின்றுகொன்று வென்றிசேர்,
மாரதர்க்கு வான்கொடுத்து வையமைவர் பாலதாம்,
சீர்மிகுத்த நின்னலாலொர் தெய்வம்நான்ம திப்பனே? (89)
841:
குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்,
நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்,
புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னித,நின்
இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே. (90)