(ஆரபி ராகம் – ரூபக தாளம்)
792:
ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்,
ஆய.நின்னை யாவர்வல்ல ரம்பரத்தொ டிம்பராய்,
மாய.மாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்,
மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே. (41)
793
:
வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை,
கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை,
ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச. பேசுகூச மின்றியே. (42)
794:
வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா,
கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே,
வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்,
அஞ்சனத்த வண்ணானாய ஆதிதேவ னல்லையே? (43)
795:
பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்,
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்,
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்,
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே? (44)
796:
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று,
எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயை, நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா,பு னந்துழாய லங்கலம்பு னிதனே. (45)
797:
தோடுபெற்ற தண்டுழாய லங்கலாடு சென்னியாய்,
கோடுபற்றி ஆழியேந்தி அஞ்சிறைப்புள் ளூர்தியால்,
நாடுபெற்ற நன்மைநண்ண மில்லையேனும் நாயினேன்,
வீடுபெற்றி றப்பொடும்பி றப்பறுக்கு மாசொலே. (46)
798:
காரொடொத்த மேனிநங்கள் கண்ண. விண்ணிண் நாதனே,
நீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை யில்லையென்ப ராதலால்,
சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே. (47)
799:
குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து,மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து பன்றியாய்,
நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே? (48)
780:
கொண்டைகொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்,
உண்டைகொண்ட ரங்கவோட்டி யுள்மகிழ்ந்த நாதனூர்,
நண்டையுண்டு நாரைபேர வாளைபாய நீலமே,
அண்டைகொண்டு கெண்டைமேயு மந்தணீர ரங்கமே. (2) (49)
781:
வெண்டிரைக்க ருங்கடல்சி வந்துவேவ முன்னோர்நாள்,
திண்டிறல்சி லைக்கைவாளி விட்டவீரர் சேருமூர்,
எண்டிசைக்க ணங்களுமி றைஞ்சியாடு தீர்த்தநீர்,
வண்டிரைத்த சோலைவேலி மன்னுசீர ரங்கமே. (50)