நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த

நான்முகன் திருவந்தாதி

சீராமப்பிள்ளை அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

திருமழிசைப்பிரானடி வாழ்த்து

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்

கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் – சீரார்

மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ

மழிசைப் பரனடியே வாழ்த்து

நான்முகன் திருவந்தாதி

23 82:

நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான் முகமாய்

அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1

2383:

தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்

ஆருமறியார் அவன்பெருமை, ஓரும்

பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்

அருள்முடிவ தாழியான் பால் 2

2384:

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,

ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்

அருபொருளை யானறிந்த வாறு? 3

2385:

ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர்

இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்

சொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4

2386:

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,

வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, – உகத்தில்

ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,

அருநான்கு மானாய் அறி 5

2387:

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,

சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்

ஈனவரே யாதலால் இன்று. 6

2388:

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே

நீயென்னை யன்றி யிலை 7

2389:

இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற

சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட

ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த

கூரம்பன் அல்லால் குறை 8

2390:

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து

மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, – கறைகொண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்

அண்டத்தான் சேவடியை ஆங்கு 9

2391:

ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்

பூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண

வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்

வல்லரே யல்லரே? வாழ்த்து 10

 


Leave a Reply