9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

style="text-align: center; ">9ஆம் பத்து 7ஆம் திருமொழி

1808

தந்தைதாய் மக்களே சுற்றமென்

றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. (2) 9.7.1

1809

மின்னுமா வல்லியும் வஞ்சியும்

வென்ற_ண் ணிடைநுடங்கும்,

அன்னமென் னடையினார் கலவியை

அருவருத் தஞ்சி னாயேல்,

துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்

காகிமுன் தூது சென்ற

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.2

1810

பூணுலா மென்முலைப் பாவைமார்

பொய்யினை மெய்யி தெ ன்று,

பேணுவார் பேசுமப் பேச்சைநீ

பிழையெனக் கருதி னாயேல்

நீணிலா வெண்குடை வாணனார்

வேள்வியில் மண்ணி ரந்த

மாணியார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.3

1811

பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்

பணைமுலை அணைதும் நாம் என்று,

எண்ணுவார் எண்ணம தொழித்துநீ

பிழைத்துய்யக் கருதி னாயேல்,

விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்

கடத்துளார் வளங்கொள் முந்நீர்

வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.4

1812

மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்

வாரணம் சூழ வாழ்ந்தார்

துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ

துயரெனக் கருதி னாயேல்

நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்

வைத்தவள் நாளை யுண்ட

மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.5

1813

உருவினார் பிறவிசேர் ஊன்பொதி

நரம்புதோல் குரம்பை யுள்புக்கு

அருவிநோய் செய்துநின் றைவர்தாம்

வாழ்வதற் கஞ்சி னாயேல்

திருவினார் வேதநான் கைந்துதீ

வேள்வியோ டங்க மாறும்

மருவினார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.6

1814

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை

மெய்யெனக் கொண்டு வாளா

பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ

பிழையெனக் கருதி னாயேல்,

தீயலா வெங்கதிர்த் திங்களாய்

மங்குல்வா னாகி நின்ற

மாயனார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.7

1815

மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்

காலிவை மயங்கி நின்ற

அஞ்சுசேராக்கையை அரணமன்

றென்றுய்யக் கருதி னாயேல்,

சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்

பாவையும் தாமும் நாளும்

வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.8

1816

வெள்ளியார் பிண்டியார் போதியார்

என்றிவர் ஓது கின்ற

கள்ளநூல் தன்னையும் கருமமன்

றென்றுய்யக் கருதி னாயேல்,

தெள்ளியார் கைதொழும் தேவனார்

மாமுநீர் அமுது தந்த,

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா

வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.9

1817

மறைவலார் குறைவிலார் உறையுமூர்

வல்லவாழடிகள் தம்மை,

சிறைகுலா வண்டறை சோலைசூழ்

கோலநீள் ஆலி நாடன்

கறையுலா வேல்வல்ல கலியன்வாய்

ஒலியிவை கற்று வல்லார்

இறைவராய் இருநிலம் காவல்பூண்

டின்பநன் கெய்து வாரே. (2) 9.7.10 

Leave a Reply