style="text-align: center; ">9ஆம் பத்து 7ஆம் திருமொழி
1808
தந்தைதாய் மக்களே சுற்றமென்
றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ
பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும்
ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. (2) 9.7.1
1809
மின்னுமா வல்லியும் வஞ்சியும்
வென்ற_ண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை
அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்
காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.2
1810
பூணுலா மென்முலைப் பாவைமார்
பொய்யினை மெய்யி தெ ன்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார்
வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.3
1811
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்
பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ
பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்
கடத்துளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.4
1812
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்
வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ
துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்
வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.5
1813
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி
நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம்
வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ
வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.6
1814
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை
மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய்
மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.7
1815
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்
காலிவை மயங்கி நின்ற
அஞ்சுசேராக்கையை அரணமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்
பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.8
1816
வெள்ளியார் பிண்டியார் போதியார்
என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார்
மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.9
1817
மறைவலார் குறைவிலார் உறையுமூர்
வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ்
கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய்
ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண்
டின்பநன் கெய்து வாரே. (2) 9.7.10