9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center; ">9ஆம் பத்து 4ஆம் திருமொழி

1778

காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்

ஏவாயி னூடியங்கும் எ·கில் கொடிதாலோ

பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்

பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. (2) 9.4.1

1779

முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,

மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்

பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி

அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. 9.4.2

1780

வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்

செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்

பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்

தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. 9.4.3

1781

பரிய இரணியன் தாகம் அணியுகிரால்

அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு

பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்

அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. 9.4.4

1782

வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த

வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,

எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,

புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. 9.4.5

1783

சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்

அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்

செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்

இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. 9.4.6

1784

கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்

தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ

புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்

வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. 9.4.7

1785

தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த

பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு

பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்

தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. 9.4.8

1786

வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,

ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,

போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,

ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. 9.4.9

1787

பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை

மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை

கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்

மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. (2) 9.4.10

Leave a Reply