9ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center; ">9ஆம் பத்து 2ஆம் திருமொழி

1758

பொன்னிவர் மேனி மரக தத்தின்

பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்

மின் இவர் வாயில்நல் வேத மோதும்

வேதியர் வானவ ராவர்தோழீ,

என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி

ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்

அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்

அச்சோ ஒருவர் அழகியவா. (2) 9.2.1

1759

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும்

சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த

சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன்

செஞ்சுட ராழியும் சங்குமேந்தி

பாடக மெல்லடி யார்வ ணங்கப்

பன்மணி முத்தொடி லங்குசோதி

ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்

அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.2

1760

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த

மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்

தாயின நாயக ராவர் தோழீ.

தாமரைக் கண்கள் இருந்தவாறு,

சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்

செவ்விய வாகி மலர்ந்தசோதி

ஆயிரம் தோளொ டிலங்கு பூணும்

அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.3

1761

வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்

கையன ஆழியும் சங்கும் ஏந்தி,

நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார்

நாகரி கர்பெரி துமிளையர்

செம்பவ ளமிவர் வாயின் வண்ணம்

தேவ ரிவர துருவம்சொல்லில்

அம்பவ ளத்திர ளேயு மொப்பர்

அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.4

1762

கோழியும் கூடலும் கோயில் கொண்ட

கோவல ரேயொப்பர் குன்றமன்ன

பாழியும் தோளுமோர் நான்கு டையர்

பண்டிவர் தம்மையும் கண்டறியோம்

வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்

மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி

அச்சோவொருவரழகியவா. 9.2.5

1763

வெஞ்சின வேழம் மருப்பொ சித்த

வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை

தஞ்சுடை யாளர்கொல் யான றியேன்

தாமரைக் கண்க ளிருந்தவாறு

கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த

காளையா ரவர்கண் டார்வணங்கும்

அஞ்சன மாமலை யேயு மொப்பர்

அச்சோவொருவரழகியவா. 9.2.6

1764

பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்

பேரரு ளாளர்கொல்? யானறியேன்,

பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ.

பண்டிவர் தம்மையும் கண்டறியோம்

அணிகெழு தாமரை யன்ன கண்ணும்

அங்கையும் பங்கய மேனிவானத்து,

அணிகெழு மாமுகி லேயு மொப்பர்

அச்சோவொருவரழகியவா. 9.2.7

1765

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட

மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?

மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த

மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்

அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார்

அச்சோவொருவரழகியவா. 9.2.8

1766

எண்டிசை யுமெறி நீர்க்க டலும்

ஏழுல குமுட னேவிழுங்கி

மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும்

மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்

கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர்

கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்

அண்டத் தமரர் பணிய நின்றார்

அச்சோவொருவரழகியவா. 9.2.9

1767

அன்னமும் கேழலும் மீனு மாய

ஆதியை நாகை யழகியாரை

கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்

காமரு சீர்க்கலி கன்றி குன்றா

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை

ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,

மன்னவ ராயுல காண்டு மீண்டும்

வானவ ராய்மகிழ் வெய்துவரே. (2) 9.2.10

Leave a Reply