6ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

திருமங்கையாழ்வார் அருளிய

பெரியதிருமொழி

style="text-align: center; ">6ஆம் பத்து 1ஆம் திருமொழி

1448

வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு

பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்

தொண்டரு மமரும் பணியநின்று

அங்கண்டமொ டகலிட மளந்தவனே.

ஆண்டாயுனைக் கான்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.1)

 

1449

அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்

கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே

விண்ணவ ரமுதுண அமுதில்வரும்

பெண்ணமு துண்டவெம் பெருமானே .

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.2)

 

1450

குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட

தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம்

விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங்

கழல்நிற அம்பது வானவனே.

ஆண்டாயுன்னைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.3)

 

1451

நிலவொடு வெயில்நில விருசுடரும்

உலகமு முயிர்களு முண்டொருகால்,

கலைதரு குழவியி னுருவினையாய்

அலைகட லாலிலை வளர்ந்தவனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.4)

 

1452

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்

சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,

ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங்

கோரெழுத் தோருரு வானவனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.5)

 

1453

கார்கெழு கடல்களும் மலைகளுமாய்

ஏர்கெழு முலகமு மாகி,முத

லார்களு மறிவரு நிலையினையாய்ச்

சீர்கெழு நான்மறை யானவனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.6)

 

1454

உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்

இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,

பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்

இருக்கினி லின்னிசை யானவனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.7)

 

1455

காதல்செய் திளையவர் கலவிதரும்

வேதனை வினையது வெருவுதலாம்,

ஆதலி னுனதடி யணுகுவன் நான்.

போதலார் நெடுமுடிப் புண்ணியனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே (6.1.8)

 

1456

சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்

காதல்செய் யாதுன கழலடைந்தேன்,

ஓதல்செய் நான்மறை யாகியும்பர்

ஆதல்செய் மூவுரு வானவனே.,

ஆண்டாய் உனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே. (6.1.9)

 

1457

பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,

காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,

பாமரு தமிழிவை பாடவல்லார்,

வாமனன் அடியிணை மருவுவரே (6.1.10)

Leave a Reply