style="text-align: center;">4ஆம் பத்து 2 ஆம் திருவாய்மொழி
3134
பாலனா யேழுல குண்டு பரிவின்றி
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்
தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே. (2) 4.2.1
3135
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே. 4.2.2
3136
பாவியல் வேதநன் மாலை பலகொண்டு
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே. 4.2.3
3137
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால் ஊழ்வினை யேன்தடந் தோளியே. 4.2.4
3138
தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க்
கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள் நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 4.2.5
3139
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால் எய்தினள் என்தன் மடந்தையே. 4.2.6
3140
மடந்தையை வண்கம லத்திரு மாதினை
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால் வாணுத லீர்.என் மடக்கொம்பே. 4.2.7
3141
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால் நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 4.2.8
3142
நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? 4.2.9
3143
என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. 4.2.10
3144
மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.(2) 4.2.11