திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">4ஆம் பத்து 2 ஆம் திருவாய்மொழி

3134

பாலனா யேழுல குண்டு பரிவின்றி

ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்

தாளிணை மேலணி தண்ணந் துழாயென்றே

மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே. (2) 4.2.1

 

3135

வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்

கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்

நல்லடி மேலணி நாறு துழாயென்றே

சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே. 4.2.2

 

3136

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு

தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற

சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே

கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே. 4.2.3

 

3137

கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்

பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்

பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே

ஓதுமால் ஊழ்வினை யேன்தடந் தோளியே. 4.2.4

 

3138

தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ க்

கோளியார் கோவல னார்க்குடக் கூத்தனார்

தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே

நாளுநாள் நைகின்ற தால்எ ன்தன் மாதரே. 4.2.5

 

3139

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்

ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்

பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே

ஓதும்மால் எய்தினள் என்தன் மடந்தையே. 4.2.6

 

3140

மடந்தையை வண்கம லத்திரு மாதினை

தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்

வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்

மடங்குமால் வாணுத லீர்.என் மடக்கொம்பே. 4.2.7

 

3141

கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்

அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி

வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்

நம்புமால் நானிதற் கென்செய்கேன் நங்கைமீர். 4.2.8

 

3142

நங்கைமீர். நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்

எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை

சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்

இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? 4.2.9

 

3143

என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்

என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்

மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்

பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே. 4.2.10

 

3144

மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்

மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்

ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்

மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.(2) 4.2.11

Leave a Reply