திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

style="text-align: center;">4ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி

3222

ஒன்றுந் தேவு முலகும்

உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று நான்முகன் தன்னொடு

தேவ ருலகோ டுயிர்படைத்தான்

குன்றம் போல்மணி மாடம்

நீடு திருக்குரு கூரதனுள்

நின்ற ஆதிப்பி ரான்நிற்க

மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2) 4.10.1

 

3223

நாடி நீர்வ ணங்கும்

தெய்வமும் உம்மையு முன்படைத்தான்

வீடில் சீர்ப்புக ழாதிப்பி

ரானவன் மேவி யுறைகோயில்

மாட மாளிகை சூழ்ந்தழ

காய திருக்குரு கூரதனைப்

பாடி யாடிப் பரவிச்

செல்மின்கள் பல்லுல கீர்.பரந்தே. 4.10.2

 

3224

பரந்த தெய்வமும் பல்லுல

கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்

கரந்து மிழ்ந்து கடந்தி

டந்தது கண்டும் தெளியகில்லீர்

சிரங்க ளால்அ மரர்வ

ணங்கும் திருக்குரு கூரதனுள்

பரன்திற மன்றிப் பல்லுலகீர்.

தெய்வம் மற்றில்லை பேசுமினே. 4.10.3

 

3225

பேச நின்ற சிவனுக்

கும்பிர மன்தனக் கும்பிறர்க்கும்

நாய கனவ னேக

பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்

தேச மாமதிள் சூழ்ந்தழ

காய திருக்குரு கூரதனுள்

ஈசன் பாலோர் அவம்ப

றைதலென் னாவதி லிங்கியர்க்கே? 4.10.4

 

3226

இலிங்கத் திட்ட புராணத்

தீரும் சமணரும் சாக்கியரும்

வலிந்து வாதுசெய் வீர்களும்

மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்

மலிந்து செந்நெல் கவரி

வீசும் திருக்குரு கூரதனுள்

பொலிந்து நின்றபி ரான்கண்டீ

ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே. (2) 4.10.5

 

3227

போற்றி மற்றோர் தெய்வம்

பேணப் புறத்திட்டு உம்மையின்னே

தேற்றி வைத்ததெல் லீரும்

வீடு பெற்றாலுல கில்லையென்றே

சேற்றில் செந்நெல் கமலம்

ஓங்கு திருக்குரு கூரதனுள்

ஆற்ற வல்லவன் மாயம்

கண்டீரது அறிந்தறிந் தோடுமினே. 4.10.6

 

3228

ஓடி யோடிப் பல்பிறப்பும்

பிறந்துமற் றோர்தெய்வம்

பாடி யாடிப் பணிந்துபல்

படிகால் வழியே றிக்கண்டீர்

கூடி வானவ ரேத்தனின்ற

திருக் குருகூ ரதனுள்

ஆடு புட்கொடி யாதி

மூர்த்திக் கடிமை புகுவதுவே. 4.10.7

 

3229

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட

மார்க்கண்டேயன் அவனை

நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது

நாராயணனருளே

கொக்கலர் தடந்f தாழை வேலித்

திருக்குருகூரதனுள்

மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்

தெய்வம் விளம்புதிரே 4-10-8

 

3230

விளம்பும் ஆறு சமய

மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்

அளந்து காண்டற் கரிய

னாகிய ஆதிப்பி ரானமரும்

வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ

காய திருக்குரு கூரதனை

உளங்கொள் ஞானத்து வைம்மின்

உம்மை உய்யக்கொண்டு போகுறிலே. 4.10.9

 

3231

உறுவ தாவ தெத்தேவும்

எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்

மறுவில் மூர்த்தியோ டொத்தித்

தனையும் நின்றவண் ணம்நிற்கவே

செறுவில் செந்நெல் கரும்பொ

டோ ங்கு திருக்குரு கூரதனுள்

குறிய மாணுரு வாகிய

நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே. 4.10.10

 

3232

ஆட்செய்த தாழிப்பி ரானைச்

சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்

நாட்க மழ்மகிழ் மாலை

மார்பினன் மாறன் சடகோபன்

வேட்கை யால்சொன்ன பாடல்

ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்

மீட்சி யின்றி வைகுந்த

மாநகர் மற்றது கையதுவே. (2) 4.10.11

 

 

Leave a Reply