ஆடிப்பூர நிறைவு; ஆண்டாள் சந்நிதியில் புஷ்ப யாகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

andal pushpayagam

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவின் நிறைவையொட்டி புஷ்ப யாகம் வியாழக்கிழமை இரவு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஆண்டாள், ரெங்க மன்னாரை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

108 வைணவ திவ்யதேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலில் மூலவர் வடபத்ரசாயி பிரதான சந்நிதியில் அருள் பாலிக்கிறார். இந்தத் தலம், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்கமன்னாரை மணந்து கொண்டார்.

பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத் திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற விழா இன்று நிறைவு பெற்றது.

விழா நிறைவை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம் பொதுவாக, ஆண்டாள் தேரோட்ட திருவிழா நிறைவு நிகழ்வாகும். மற்றும் திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளில் இந்த புஷ்பயாகம் நடைபெறும்.

ஆடிப் பூரத் திருவிழாவின் நிறைவு நாளில் புஷ்பயாகம் நடைபெற்றது, மேலும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

புஷ்பயாகம் என்பது கோயிலில் உள்ள உத்ஸவர்களுக்கு பல வண்ண மலர்களால் செய்யப்படும் ஒரு சிறப்பு அபிஷேகம் ஆகும். இது ஆண்டாள் கோவிலில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.



Leave a Reply