திருவிருத்தம்

நம்மாழ்வார்

 

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவிருத்தம்

தனியன்

கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,

ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,

ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,

திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

திருவிருத்தம்

2478: தாமான தன்மையில் அருளிச் செய்தது

 

பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியாமுறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய் இமையோர் தலைவா.

மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே. 1

 

2479: தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்துரைத்தல்

 

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்

அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ

முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்

தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே. 2

 

2480: பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து உரைத்தல்

 

குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,

நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல், தண்ணந்துழாய்

அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்

தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச் கமே. 3

 

2481: தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்திக்கூறல்

 

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்

கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே

முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்

பனிநஞ்ச மாருதமே, எம்மதாவி பனிப்பியல்வே? 4

 

2482: வாடைக்கு நலிந்த தலைவியின் மாமை கண்டு தோழி இரங்கல்

 

பனிபியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்

பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந் தண்ணந்துழாய்

பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்

பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே? 5

 

2483: தலைவியின் எழில் கண்டு வியந்த தலைவன் வார்த்தை

 

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,

கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்

கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்

நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6

 

2484: கால மயக்கு

 

ஞாலம் பனிப்பச் செரித்து,நன் நீரிட்டுக் கால்சிதைந்து

நீலவல் லேறு பொராநின்ற வான மிது,திருமால்

கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்

காலங்கொ லோவறி யேன்,வினை யாட்டியேன் காண்கின்றவே? 7

 

2485: தலைவன் பொருள்வயிற்பிரிதலைக் குறிப்பாலறிந்த தலைவி தோழிக்கு உரைத்தல்

 

காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்

பாண்குன்ற நாடர் பயில்கின்றன, இதெல் லாமறிந்தோம்

மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்

சேண்குன்றம் சென்று,பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே. 8

 

2486: தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறல்

 

திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்,விண் ணாடனைய

வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,இவையோ

கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி

வண்பூங் குவளை, மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9

 

2487: மதியுடம்படுக்கலுற்ற தலைவன் குறையுற உரைத்தல்

 

மாயோன் வடதிரு வேங்கட நாட,வல் லிக்கொடிகாள்.

நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரை யீர் நுமது

வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்

ஆயோ அடும்தொண்டை யோ,அறை யோவி தறிவரிதே. 10

 

Leave a Reply