திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

 

சிவபெருமானையே சோதித்தவர̷் 0;

நெஞ்சமெல்லாம் கசிந்துருகி பாடியாடினார். திருமால் அவருக்கு மதிநலம் தந்தார். பரம்பொருளான பரந்தாமன் தனக்குக் காட்சி தந்த கருணைத் திறத்தை எண்ணியெண்ணி மகிழ்ந்தார் திருமழிசையார்.

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்

ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்

செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்

எங்கட்கு அரியதொன்றும் இல் – என்னும் திருமழிசையாரின் வெண்பாவின் மூலம், அவருடைய மனநிலையை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமழிசையாழ்வார் பகவான் ஸ்ரீமந் நாராயணன் மீது இன்னிசை பாக்களைத் தீந்தமிழில் புனையலானார். திருவல்லிக்கேணிக்குச் சென்று மாலவனை மனத்தில் ஏந்தி யோகத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரத்தில் அவருடைய பரம பக்தியை சோதிப்பதுபோல் உமையொரு பாகரான சிவனார் தம் தேவியோடு ரிஷப வாகனத்தில் சென்றார். உமாதேவி திருமழிசையாரைக் கண்டதும் யோகத்தில் அமர்ந்திருக்கும் அவருக்குக் காட்சியளித்து நாம் அருள்புரிவோம் என்று கயிலையானிடம் கூறினாள்.

தேவி! அவர் நாராயணன் மீது பக்தி பூண்டவர். அவர் பாகவத அனுபவம் ஒன்றிலே லயித்திருக்கிறார். தவிரவும் வேறொன்றையும் அவர் விரும்பமாட்டார். நம்மையும் கவனிக்க மாட்டார் என்றார் சிவபெருமான்.

ஆயினும் அவரைக் கண்டு செல்வதே தங்கள் திருவருளுக்கு ஏற்றது என்று அவரை வற்புறுத்த, சரி என்று, திருமழிசையாரின் முன் காட்சியளித்தார்.

திருமழிசையாழ்வாரோ உமையொருபாகனைக் கண்ணெடுத்தும் பாராதிருந்தார். அதை உணர்ந்த சிவனார், கண்டும் காணாதவர் போல் திருமழிசையார் அருகில் சென்று, உமக்கு அருள் புரியவே யாம் இங்கு வந்தோம். எம்மை அலட்சியம் செய்யலாமா? என்று கேட்டார்.

உம்மால் எனக்கு ஆக வேண்டிய பயன் என்ன? அதனாலே மௌனமாக இருக்கிறேன் என்றார் திருமழிசையார். ஓஏதாவது வரம் கேள்! தருகிறோம்!ஔ என்றார் சிவபெருமான். ஓஎனக்கு ஒன்றும் வேண்டாம்ஔ என்றார் திருமழிசையார்.

நம்முடைய வருகை வீணாகாமல் ஏதாவது ஒரு வரத்தைக் கேள்! என்று மீண்டும் சிவபெருமான் புன்சிரிப்போடு கூறினார்.

திருமழிசையாரும் புன்சிரிப்போடு உம்மால் எனக்கு பரமபதம் தரமுடிந்தால் அதையே வரமாகத் தாருங்கள் என்று கேட்டார்.

பரமபதத்தை அருளக்கூடியவன் பரந்தாமனான வைகுந்த நாதனே! ஆகையால் என்னால் தரக்கூடிய வேறு ஏதாவது வரத்தைக் கேளும் என்றார் பரமசிவன்.

பரமபதம் பெற பல தவங்கள் புரிய வேண்டும். அதற்கு எனக்கு அதிக ஆயுள் வேண்டும். எனவே இன்று சாகவேண்டியவர்களை நாளை சாகும்படி செய்ய உம்மால் முடியுமா? என்று கேட்டார் திருமழிசையார்.

அது உயிர்களின் வினைப்படி நடக்கும் என்றார் சிவபெருமான்.

இதைக் கேட்டதும் எள்ளி நகையாடிய வண்ணம், அருகிலிருந்த ஒரு ஊசியைக் காட்டி, இதன் பின்னே இந்த நூல் வருகிறபடி செய்ய முடியுமா? என்று கேட்டார்.

இந்த எள்ளல் வார்த்தை கேட்டதும் மிகுந்த சினங்கொண்டார் சிவனார். முக்கண்ணனாகிய சிவபெருமான் தம் மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணைத் திறந்தார். அடுத்த கணம் அதிலிருந்து பெரும் நெருப்பு எழுந்து மூவுலகையும் சூழ்ந்தது. ஆனால் அந்நெருப்பால் திருமழிசையார் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. பதிலுக்கு திருமழிசையார் யோக வலிமையால் தம் வலது திருவடியில் ஒரு கண்ணை உண்டாக்கி, அதை ஏவினார்.

அதிலிருந்து நெருப்பு ஊழித்தீ போல் பொங்கி எழுந்தது. மூவுலகையும் தாக்கி தகிக்கச் செய்தது. கங்கையை சடையில் தாங்கிய சிவபெருமானையும் அந்நெருப்பு சூழ்ந்தது. அதனால் இந்திராதி தேவர்கள் வைகுந்தம் சென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமகள்நாதனை வணங்கி இந்நெருப்பிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

திருமால் அந்தத் தேவர்களை நோக்கி, தேவர்களே கவலையை விடுங்கள்; நாம் புஷ்கலாவர்த்தம் பொழியச்செய்து, அப்பெரு நெருப்பை அடக்குகிறோம் என்றார். அவ்வாறே புஷ்கலாவர்த்தம் என்னும் மேகத்தை அனுப்பினார். அம்மேகம் பெருமழையைப் பெய்வித்து பெருந்தீயை அணைத்தது. அதோடு பிரளய வெள்ளம் போல் பூமியெங்கும் நீர் நிறையலாயிற்று. ஆயினும் அதற்கு அஞ்சாதவராக திருமழிசையார் திருமகள்நாதனை மனத்தில் எண்ணியவாறு அந்தப் பெரு வெள்ளத்தினிடையேயும் அசைவற்று அமர்ந்திருந்தார்.

அவருடைய செயலைக் கண்ட சிவபெருமான் அவருடைய பரம பக்தியின் வலிமையைப் போற்றிப் புகழ்ந்து கயிலைக்குச் சென்றார். அதிலிருந்து திருமழிசையாருக்கு பக்திசாரர் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று.

 

Leave a Reply