திருவாய்மொழி ஏழாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி

3475

வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித்

தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,

புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்

எஞ்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,

வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த

வேத வொலியும் விழா வொலியும்,

பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும்

அறாத் திருப்பே ரையில் சேர்வன் நானே. (2) 7.3.1

 

3476

நானக் கருங்குழல் தோழி மீர்காள்.

அன்னை யர்காள்.அயல் சேரியீர்காள்,

நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்

என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,

தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்

தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,

வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்

செங்கனி வாயின் திறத்த துவே. 7.3.2

 

3477

செங்கனி வாயின் திறத்த தாயும்

செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,

சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்

தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,

திங்களும் நாளும் விழாவ றாத

தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,

நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ.

நாணும் நிரையு மிழந்த துவே. 7.3.3

 

3478

இழந்தவெம் மாமை திறத்துப் போன

என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,

உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ?

ஓதக் கடலொலி போல எங்கும்,

எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு

தெந்திருப் பேரையில் வீற்றி ருந்த,

முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்

அன்னையர் காள்.என்னை யென்மு னிந்தே? 7.3.4

 

3479

முனிந்து சகடம் உதைத்து மாயப்

பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,

கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த

கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,

முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்.

முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,

கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே

காலம் பெறவென்னைக் காட்டு மினே. 7.3.5

 

3480

காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,

நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,

ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,

கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே. 7.3.6

 

3481

பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,

பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,

ஆரை யினிங் குடையம் தோழி. என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,

ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 7.3.7

 

3482

கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்

கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,

மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,

தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே. 7.3.8

 

3483

சேர்வஞ்சென் றென்னுடைத் தோழி மீர்காள். அன்னையர் காள்.என்னைத் தேற்ற வேண்டா,

நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,

கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,

ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப்பேரை யின்மா நகரே. 7.3.9

 

3484

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக்

கில்லையென் தோழி மீர்காள்,

சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப்

பேரையில் வீற்றி ருந்த,

மகர நெடுங்குழைக் காதன் மாயன்

நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,

நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம்

கவர்ந்தெனை யூழி யானே? 7.3.10

 

3485

ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும்

வேறவன் வையங் காக்கும்,

ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை

அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,

கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவை

திருப் பேரையில் மேய பத்தும்,

ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி

மைத்திறத் தாழி யாரே. (2) 7.3.11

Leave a Reply