திருவாய்மொழி ஏழாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 9ஆம் திருவாய்மொழி

3541

என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,

அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்

நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? (2) 7.9.1

 

3542

என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,

என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,

தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்

முன்சொல்லும் மூவுரு வாம் முதல்வனே. 7.9.2

 

3543

ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்

நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,

தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்

வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ? 7.9.3

 

3544

அப்பனை யென்று மறப்பனென் னாகியே,

தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,

ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு

செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? 7.9.4

 

3545

சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,

நேற்பட யான்சொல்லும் நீர்மை யிலாமையில்,

ஏர்விலா என்னைத்தன் னாக்கி என் னால்தன்னை,

பார்பரவு இன்கவி பாடும் பரமரே. 7.9.5

 

3546

இன்கவி பாடும் பரம கவிகளால், தன்கவி

தான்தன்னைப் பாடுவி யாது,இன்று

நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,

வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. 7.9.6

 

3547

வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,

செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,

வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி,

செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ. 7.9.7

 

3548

ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,

பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,

ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே? 7.9.8

 

3549

திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,

இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,

மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே? 7.9.9

 

3560

உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,

அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,

பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,

எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே. 7.9.10

 

3551

இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,

அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,

இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,

எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே. (2) 7.9.11

Leave a Reply