திருவாய்மொழி ஏழாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி

3552

இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை

இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்

அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை

அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (2) 7.10.1

 

3553

ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே

ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்

மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை

மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. 7.10.2

 

3554

கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை

ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்

பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்

நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. 7.10.3

 

3555

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை

வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த

வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே. 7.10.4

 

3556

மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்பொழு துமிருத் திவணங்க

பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்

மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை

உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. 7.10.5

 

3557

ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்

அன்றங் கமர்வென் றுருப்பிணி நங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்

என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்பவுள் ளேயிருக் கின்றபிரான்

நின்ற அணிதிரு வாறன் விளையென்னும் நீணக ரமதுவே. 7.10.6

 

3558

நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை

நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்

வாண புரம்புக்கு முக்கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து

வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. 7.10.7

 

3559

அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே. என் றகலிரும் பொய்கையின்வாய்

நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்

சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. 7.10.8

 

3560

தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால்

நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று

யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. 7.10.9

 

3561

சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும்

சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை

சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும்

சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே. 7.10.10

 

3562

தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி

தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்fசொன்ன

தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை தேவர்வைகல்

தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (2) 7.10.11

 

Leave a Reply