திருவாய்மொழி முதல் பத்து

நம்மாழ்வார்

 

 

style="text-align: center;">1ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழி

 

2846

பரிவதி லீசனைப் பாடி

விரிவது மேவ லுறுவீர்.

பிரிவகை யின்றிநன் னீர்தூய்

புரிவது வும்புகை பூவே. (2) 1.6.1

 

2847

மதுவார் தண்ணந் துழாயான்

முதுவே தமுதல் வனுக்கு

எதுவே தென்பணி என்னா

ததுவே யாட்செய்யு மீடே. 1.6.2

 

2848

ஈடு மெடுப்புமி லீசன்

மாடு விடாதென் மனனே

பாடுமென் நாவலன் பாடல்

ஆடுமெ னங்கம ணங்கே. 1.6.3

 

2849

அணங்கென ஆடுமெ னங்கம்

வணங்கி வழிபடு மீசன்

பிணங்கி யமரர் பிதற்றும்

குணங்கெழு கொள்கையி னானே. 1.6.4

 

2850

கொள்கைகொ ளாமையி லாதான்

எள்கலி ராகமி லாதான்

விள்கைவிள் ளாமைவி ரும்பி

உள்கலந் தார்க்கோ ரமுதே. 1.6.5

 

2851

அமுதம் அமரகட் கீந்த

நிமிர்சுட ராழி நெடுமால்

அமுதிலு மாற்ற இனியன்

நிமிர்திரை நீள்கட லானே. 1.6.6

 

2852

நீள்கடல் சூழிலங் கைக்கோன்

தோள்கள் தலைதுணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி

நாள்கள் தலைக்க ழிமினே. 1.6.7

 

2853

கழிமின்தொண் டீர்கள் கழித்துத்

தொழுமின் அவனைத் தொழுதால்

வழிநின்ற வல்வினை மாள்வித்து

அழிவின்றி யாக்கம் தருமே. 1.6.8

 

2854

தரும அரும்பய னாய

திருமக ளார்தனிக் கேள்வர்,

பெருமை யுடைய பிரானார்,

இருமை வினைகடி வாரே. 1.6.9

 

2855

கடிவார் தீய வினைகள்

நொடியா ருமள வைக்கண்

கொடியா அடுபுள் ளுயர்த்த

வடிவார் மாதவ னாரே. 1.6.10

 

2856

மாதவன் பால்சட கோபன்

தீதவ மின்றி யுரைத்த

ஏதமி லாயிரத் திப்பத்து

ஓதவல் லார்பிற வாரே. 1.6.11

Leave a Reply