திருவாய்மொழி முதல் பத்து

நம்மாழ்வார்

style="text-align: center; ">முதல் பத்து – 2ம் திருவாய்மொழி

 

 

 

2802

வீடுமின் முற்றவும்

வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை

வீடுசெய்ம்மினே. (2) 1.2.1

 

2803

மின்னின் நிலையில

மன்னுயி ராக்கைகள்

என்னு மிடத்து இறை

உன்னுமின் நீரே. 1.2.2

 

2804

நீர்நும தென்றிவை

வேர்முதல் மாய்த்து இறை

சேர்மின் உயிர்க்கு அத

னேர்நிறை யில்லே. 1.2.3

 

2805

இல்லது முள்ளதும்

அல்ல தவனுரு

எல்லையி லந்நலம்

புல்குபற் றற்றே. 1.2.4

 

2806

அற்றது பற்றெனில்

உற்றது வீடுஉயிர்

செற்றது மன்னுறில்

அற்றிறை பற்றே. 1.2.5

 

2807

பற்றில னீசனும்

முற்றவும் நின்றனன்

பற்றிலை யாய் அவன்

முற்றி லடங்கே. 1.2.6

 

2808

அடங்கெழில் சம்பத்து

அடங்கக்கண்டு ஈசன்

அடங்கெழி லஃதென்று

அடங்குக வுள்ளே. 1.2.7

 

2809

உள்ள முரைசெயல்

உள்ளவிம் மூன்றையும்

உள்ளிக் கெடுத்து இறை

யுள்ளிலொ டுங்கே. 1.2.8

 

2810

ஒடுங்க அவன்கண்

ஒடுங்கலு மெல்லாம்

விடும்பின்னு மாக்கை

விடும்பொழு தெண்ணே. 1.2.9

 

2811

எண்பெருக் கந்நலத்து

ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன்

திண்கழல் சேரே. (2) 1.2.10

 

2812

சேர்த்தடத் தென்குரு

கூர்ச்ட கோபன்சொல்

சீர்த்தொடை யாயிரத்து

ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11

 

Leave a Reply