2ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

2ஆம் பத்து 6ஆம் திருமொழி

1098

நண்ணாத வாளவுண

ரிடைப்புக்கு, வானவரைப்

பெண்ணாகி யமுதூட்டும்

பெருமானார், மருவினிய

தண்ணார்ந்த கடன்fமல்லைத்

தலசயனத் துறைவாரை,

எண்ணாதே யிருப்பாரை

யிறைப்பொழுது மெண்ணோமே. (2) 2.6.1

 

1099

பார்வண்ண மடமங்கை

பனிநன்மா மலர்க்கிழத்தி,

நீர்வண்ணன் மார்வகத்தி

லிருக்கையைமுன் நினைந்தவனூர்,

கார்வண்ண முதுமுந்நீர்க்

கடல்மல்லைத் தலசயனம்,

ஆரெண்ணும் நெஞ்சுடையா

ரவரெம்மை யாள்வாரே. 2.6.2

 

1100

ஏனத்தி னுருவாகி

நிலமங்கை யெழில்கொண்டான்,

வானத்தி லவர்முறையால்

மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,

கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத் துறைகின்ற,

ஞானத்தி னொளியுருவை

நினைவாரென் நாயகரே. 2.6.3

 

1101

விண்டாரை வென்றாவி

விலங்குண்ண, மெல்லியலார்

கொண்டாடும் மல்லகலம்

அழலேற வெஞ்சமத்துக்

கண்டாரை, கடல்மல்லைத்

தலசயனத் துறைவாரை,

கொண்டாடும் நெஞ்சுடையா

ரவரெங்கள் குலதெய்வமே. 2.6.4

 

1102

பிச்சச் சிறுபீலிச்

சமண்குண்டர் முதலாயோர்,

விச்சைக் கிறையென்னு

மவ்விறையைப் பணியாதே,

கச்சிக் கிடந்தவனூர்

கடன்fமல்லைத் தலசயனம்,

நச்சித் தொழுவாரை

நச்சென்றன் நன்னெஞ்சே. 2.6.5

 

1103

புலன்கொள்நிதிக் குவையோடு

புழைக்கைமா களிற்றினமும்

நலங்கொள்நவ மணிக்குவையும்

சுமந்தெக்கும் நான்றொசிந்து,

கலங்களியங் கும்மல்லைக்

கடல்மல்லைத் தலசயனம்,

வலங்கொள்மனத் தாரவரை

வலங்கொள்ளென் மடநெஞ்சே. 2.6.6

 

1104

பஞ்சிச் சிறுகூழை

யுருவாகி, மருவாத

வஞ்சப்பெண் நஞ்சுண்ட

அண்ணல்முன் நண்ணாத,

கஞ்சைக் கடந்தவனூர்

கடன்fமல்லைத் தலசயனம்,

நெஞ்சில் தொழுவாரைத்

தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.7

 

1105

செழுநீர் மலர்க்கமலம்

திரையுந்த வன்பகட்டால்,

உழுநீர் வயலுழவ

ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,

கழுநீர் கடிகமழும்

கடன்fமல்லைத் தலசயனம்,

தொழுநீர் மனத்தவரைத்

தொழுவாயென் தூய்நெஞ்சே. 2.6.8

 

1106

பிணங்களிடு காடதனுள்

நடமாடு பிஞ்ஞகனோடு,

இணங்குதிருச் சக்கரத்தெம்

பெருமானார்க் கிடம்,விசும்பில்

கணங்களியங் கும்மல்லைக்

கடன்fமல்லைத் தலசயனம்,

வணங்குமனத் தாரவரை

வணங்கென்றன் மடநெஞ்சே. 2.6.9

 

1107

கடிகமழு நெடுமறுகில்

கடல்மல்லைத் தலசயனத்து,

அடிகளடி யேநினையு

மடியவர்கள் தம்மடியான்,

வடிகொள்நெடு வேல்வலவன்

கலிகன்றி யொலிவல்லார்,

முடிகொள்நெடு மன்னவர்தம்

முதல்வர்முத லாவாரே. (2) 2.6.10

Leave a Reply