சபரிமலையில் தனிநபர் வழங்கும் விக்ரஹத்தை ஏற்கத் தடை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala aiyappa concluding pooja

சபரிமலை கோயிலில் தனி நபர் வழங்கும் ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய தனி நபர் வழங்கி உள்ளார். தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

சிலை பிரதிஷ்டை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. தனி நபர் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்யும் அனுமதிக்கு 2 வாரம் தடை விதித்தது நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா அமர்வு உத்தரவிட்டது.


சபரிமலையில் தற்காலிக பணியாளர் வாய்ப்பு!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் தற்காலிக ஊழியர்களாகும் வாய்ப்பு; 1800 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய பட உள்ளதாக திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
1201 ஆம் ஆண்டு (2025-26) மண்டல-மகரவிளக்கு மஹோத்சவத்தையொட்டி, சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல் தேவஸ்தானங்களில் தற்காலிக ஊழியர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். 18 முதல் 65 வயதுக்குட்பட்ட இந்து ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு ரூ. 650 தினசரி ஊதியம், தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும். விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ் மற்றும் சுகாதார அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் www.travancoredevaswomboard.org என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.

விண்ணப்பங்களை ஆகஸ்ட் 16, 2025 அன்று மாலை 5 மணிக்கு முன் தலைமைப் பொறியாளர், திருவிதாங்கூர் தேவசம்போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம் என்ற முகவரியிலோ அல்லது tdbsabdw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பெறும் படி இருக்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது



Leave a Reply