திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">6ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி

3409

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,

திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே. 6.7.1

 

3410

ஊரும் நாடும் உலகும் தன்னைப்போல், அவனுடைய

பேரும் தார்களு மேபிதற்றக் கற்பு வானிடறி,

சேருநல் வளஞ்சேர் பழனத் திருகோ ளூர்க்கே,

போருங் கொலுரை யீர்க்கொடி யேன்கொடி பூவைகளே. 6.7.2

 

3411

பூவை பைங்கிளிகள் பந்து தூதைபூம் புட்டில்கள்,

யாவையும் திருமால் திருநாமங் களேகூவி யெழும்,என்

பாவை போயினித் தண்பழனத் திருக்கோ ளூர்க்கே,

கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணோ டென்செய் யுங்கொலோ? 6.7.3

 

3412

கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ,

சில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே,

செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,

மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே. 6.7.4

 

3413

மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்

தேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில்,

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு,

ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே? 6.7.5

 

3414

இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய்,

தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே

சென்று,தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு,

நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே. 6.7.6

 

3415

மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,

அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,

ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே? 6.7.7

 

3416

ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து,

கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,

ஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே,

கசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே? 6.7.8

 

3417

காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று,

ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய்,

சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே,

நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே. 6.7.9

 

3418

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,

அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை,

தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே,

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே. 6.7.10

 

3419

வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி,

கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,

பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே,

சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே. 6.7.11

Leave a Reply